Sunday, July 19, 2015

நடைபாதையில் அசுரத்தனமாக வந்த கார்: அந்தரத்தில் தூக்கி வீசப்பட்ட மனிதர்கள் (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவில் வேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் பலியாகினார், மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் சாலை ஒன்றின் நடைப்பாதையில் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
இந்நிலையில் பின்னால் ஒரு கார் வேகமாக வரும் சத்தம் கேட்டு திரும்பியுள்ளனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் அந்தரத்தில் தூக்கிவீசப்பட்டனர்.
இதில் ஒருவர் மரணமடைந்தார், மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்த விளக்கு கம்பத்தில் மோதி கார் நின்றது. காரில் இருந்து இறங்கி வந்த அதன் ஓட்டுனர் ஆண்ட்ரி இசாயே அடிபட்டவர்களை பார்க்காமல் காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதா என்று பார்த்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இசாயேவை பொலிசார் கைது செய்தனர்.
மேலும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டும் குற்றத்துக்காக அவரை பொலிசார் முன்னரே தேடிவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment