Thursday, July 23, 2015

பங்களாதேஷில் சிறுவன் அடித்துக் கொலை: வைரலாக பரவியுள்ள வீடியோ இதோ !

பங்களாதேஷ் நாட்டில் சிறுவனொருவன் அடித்துகொல்லப்பட்ட விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.சமியுல் என்ற 13 வயதான சிறுவன் சைக்கிள் 'ரிக்சா' ஒன்றை திருட முயன்றதாக க் கூறி அவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், தாக்குதலை நடத்தியோரில் ஒருவர் சம்பவத்தை கையடக்கத்தொலைபேசியில் படமெடுத்துள்ளார்.

இது தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.தாக்குதலை நட த்தியவர்கள் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் சவுதி அரேபியாவிற்கு தப்பிச் சென்றபோதிலும் அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலில் 60 வரையான காயங்கள் இருந்த தாகவும், தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் உயிரிழந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவ த்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்களாதேஷில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment