பாரெய்ன்(Bahrain) நாட்டில் சீரழிக்கப்பட்ட பணிப்பெண் ஒருவர் பேஸ்புக்கின் உதவியுடன் நாடு திரும்பியுள்ளார்.
பிலிப்பைன்ஸை சேர்ந்த எபே லூனா(Abby Luna Age-28) என்ற பெண், பாரெய்னில் உள்ள வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர் தனது முதலாளியின் மகனால் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது, போதைக்கு அடிமையான என் முதலாளியின் மகன், என்னை அடித்து துன்புறுத்துவது மட்டுமின்றி பலமுறை கற்பழித்துள்ளார்.
இவ்விடயத்தை யாரிடமாவது கூறினால் என்னை கொன்று புதைத்துவிடுவேன் என அவர் மிரட்டுகிறார்.
இதனால் நான் மிகவும் பயந்துள்ளேன். என்னை மீட்க உதவி செய்யுங்கள் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
இந்த வீடியோ பேஸ்புக்கில் தீயாய் பரவியது. மேலும் பல்லாயிரக் கணக்காணோர் இதனை பகிர்ந்திருந்தனர்.
இதனையடுத்து பிலிப்பைன்ஸ் அரசு அவரை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, அந்நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
தற்போது மீட்கப்பட்டுள்ள லூனா இதுகுறித்து எழுத்துபூர்வமாகவும் பிலிப்பைன்ஸ் தூதரகத்துக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment