Saturday, April 11, 2015

நண்பனின் மனைவியை மிரட்டி 4 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

ஆபாசப் படத்தை காண்பித்து நண்பனின் மனைவியை மிரட்டி 4 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை தானே வசாயை அடுத்த கோகிவாரே பகுதியை சேர்ந்த காதீர்கான் (45) தனது நண்பர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நண்பரின் வீட்டிற்கு மனைவி மட்டும் தனியாக இருக்கும் நேரத்தில் காதீர்கான் சென்றுள்ளார். அப்போது தான் கொண்டு சென்ற மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். இதை அவரது நண்பரது மனைவியும் குடித்துள்ளார். குடித்ததும் நண்பரின் மனைவி மயங்கி விழுந்துள்ளார். அந்த சமயம் அந்தப் பெண்ணை காதீர்கான் கற்பழித்துள்ளார். மேலும் அதை தனது செல்போனில் படமாக்கியுள்ளார். பின்னர் நண்பர் இல்லாத நேரங்களில் அந்த காட்சியை காண்பித்து கடந்த 4 வருடத்திற்கும் மேலாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை தாளாமல் அந்த பெண் நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காதீர்கான் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காதீர்கானை கைது செய்தனர்.

No comments:

Post a Comment