Sunday, March 1, 2015

பிரித்தானியாவில் முஸ்லீம்களுக்கு எதிராக திரண்ட 2,000 பேர்: பெரும் களோபரத்தில் முடிந்தது !

நேற்றைய தினம் பிரித்தானியாவின் நியூ காசில் நகரில் சுமார் 2,000 வெள்ளை இன மக்கள் முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் ஆர்பாட்டம் ஒன்றில் இறங்கினார்கள். இதனால் அன் நகரமே ஸ்தம்பித்து போய்விட்டது. குறித்த ஆர்பாட்டத்தை அடக்க பொலிசார் வரவளைக்கப்பட்டார்கள். அவர்களை பொலிசார் தடுக்க முற்பட்டவேளை அது பெரும் கலவரத்தில் போய் நின்றது என்கிறார்கள். இதனால் சில கடைகள் உடைக்கப்பட்டதோடு பலர் கைதாகியும் உள்ளார்கள். சமீபகாலமாக ஐ.எஸ் தீவிரவாதிகள், பல வெளிநாட்டவர்களின் தலைகளை துண்டித்து கொலைசெய்து வருகிறார்கள். இதனைக் கண்டு சகிக்க முடியாத ஒரு கூட்டத்தினரே இவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்கள்.

இருப்பினும் பிரித்தானியாவில் உள்ள முஸ்லீம்கள் , அதற்கு என்ன செய்ய முடியும் ? முஸ்லீம்கள் என்றாலே அனைவரும் தீவிரவாதிகள் என்ற பார்வை தற்போது பிரித்தானியாவில் வளர்ந்து வருகிறது. புகைப்படங்கள் இணைப்பு.




No comments:

Post a Comment