Friday, January 23, 2015

செக்ஸ் தொல்லை கொடுத்த நபரின் நாக்கை கடித்து அதனை பொலிசாரிடம் கொடுத்த !

பிரித்தானியாவில் டன்ஸ்டபிள் என்னும் இடத்தில், நடந்து சென்ற பெண்ணை , மனில்லா என்னும் 28 வயது நபர் செக்ஸ் தொல்லைக்கு உள்ளாக்கியுள்ளார். குறித்த பெண்ணை கட்டிப்பிடித்து உதட்டு முத்தம் கொடுக்க முனறுள்ளார். இந்தவேளை அவர் நாக்கை இப்பெண் கடித்துவிட்டார். அதில் ஒரு சின்ன துண்டு குறித்த பெண்ணின் வாய்க்குள் இருந்துள்ளது. ஒருவாறு தன்னை விடுவித்துக்கொண்ட அந்தப் பெண், அங்கிருந்து தப்பிவிட்டார். இதேவேளை அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் செய்து அந்த நாக்கின் சிறிய துண்டையும் பொலிசாரிடம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து பொலிசார் அந்த நாகில் உள்ள ரத்தத்தை வைத்து அதிலுள்ள டி.எ.ஏ யை கண்டுபிடித்துள்ளார்கள். இதேவேளை குறித்த நபரையும் கைதுசெய்துள்ளார்கள். இவர் ஒரு புத்தி சுவாதீனம் அற்றவர் என்றும், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் பொலிசார் கூறியுள்ளார்கள். இவரை வைத்தியசாலையில் வைத்திருக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment