Thursday, December 18, 2014

ஆபாச படங்கள்...மாணவியை கொலை செய்தது ஏன்? மாணவன் பரபரப்பு வாக்குமூலம்!

வேலூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே புதூர் தாங்குப்பம் பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் மகள் கீர்த்திகா(12) என்ற மாணவி, அதே பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் சரண்ராஜ் என்ற மாணவனால் கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாணவன் அளித்துள்ள வாக்குமூலம்
திங்கட்கிழமை மதியம் பள்ளி முடிந்து சென்ற கீர்த்திகாவை வலுக்கட்டாயமாக ஒரு தோப்புக்குள் அழைத்து சென்றேன்.
அங்கு மாணவியை மிரட்டி ஆடைகளை அவிழ்க்க சொல்லி தவறாக நடக்க முயன்றேன். அப்போது அவள் சத்தம் போடவே கழுத்தை நெரித்தேன். இதனால் அவள் மயங்கி கீழே விழுந்தாள்.
உடனே மாணவியின் துப்பட்டாவை எடுத்து கழுத்தை இறுக்கினேன், அவள் தலையில் கட்டியிருந்த ரிப்பனை அவிழ்த்து கை, கால்களை கட்டினேன். மேலும் பாட்டிலால் தலையில் அடித்தும், நெஞ்சிலும் கிழித்தேன்.
இதனால் அவள் இறந்துவிட்டாள். பின்னர் மாணவியின் கொலுசு, சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளான்.
பொலிஸ் விசாரணை
அந்த மாணவன், நண்பர்களுடன் சேர்ந்து கைப்பேசி மற்றும் மடிக்கணனியில் ஆபாச படம் பார்த்து வந்ததாலும், அந்த படத்தில் உள்ளது போல் உறவு கொள்ளும் எண்ணத்தில் மாணவியை ஏமாற்றி அழைத்து சென்றபோது இந்த விபரீத செயலில் ஈடுபட்டு உள்ளான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
முன்னதாக நேற்று காலை கே.வி.குப்பம் வியாபாரிகள், பொதுமக்கள், மாணவர் சங்கத்தினர் என 500-க்கும் மேற்பட்டவர்கள் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
முதல்வர் நிதியுதவி
கீர்த்திகாவை இழந்த குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment