Monday, December 22, 2014

பிலிபைன்ஸ் பாதாளக் குழு அங்கிருந்தபடியே லண்டன் இளைஞரைக் கொன்ற கதை: அதிரவைக்கிறது !

காருக்கு "லாக்" போடும் அதிகாரிகள்: ஆனால் அதனை உடைத்துவிட்டு தப்பிச் செல்லும் பெண் ஓட்டுனர் !

[ Dec 22, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 12645 ]

வெளிநாடுகளில் எல்லாம் காரை, பார்க் செய்ய கூடாத இடத்தில் பார்க் செய்தார் போதும். உடனே தண்டப் பணத்தை அறவிட்டு விடுகிறார்கள் இல்லையென்றால், காரை லாக் செய்துவிடுகிறார்கள். மேலும் சில இடங்களில் காரை அப்படியே அலேக்காக தூக்கிச் சென்றுவிடுகிறார்கள். பின்னர் பெரும் பணத்தை தண்டமாகச் செலுத்தியே காரை மீட்க்கவேண்டி உள்ளது. பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்று நடைபெறுவது சகஜம். ஆனால் இப்படிச் செய்ய முன்னர் குறித்த போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஓட்டுனருக்கு ஒரு குறித்த நேரத்தை கொடுக்கவேண்டும்.
அந்த நேரத்தினுள் அவர்கள் தமது வாகனத்தை அங்கிருந்து எடுக்காவிட்டால் தான் அவர்கள் அதற்கான தண்டப் பணத்தை அறவிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது விதி. ஆனால் சில போக்குவரத்து அதிகாரிகள் அப்படி அல்ல. வாகனம் ஒன்று பார்க் செய்யக்கூடாத இடத்தில் தரித்து நிற்பதை பார்த்தாலே போதும். உடனே அதற்கான தண்டப் பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுப்பார்கள். இதுபோலத்தான் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், ஒரு பெண் தனது காரை பார்க் செய்துவிட்டு அதனை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அங்கே ஓடிவந்த அதிகாதி காரை எடுக்கவிடாமல் அதன் சக்கரத்தை லாக் செய்துவிட்டார்.
இவ்வாறு லாக் செய்யப்பட்டால், அதற்கான தண்டப்பணத்தை கொடுத்துவிட்டு தான் காரை எடுத்துச் செல்ல முடியும். ஆனால் என்ன தான் நடக்கிறது பார்கலாம் என்று நினைத்த அப்பெண் தனது காரை உடனே ஸ்டான் செய்து ஓட ஆரம்பித்துவிட்டார். என்ன ஆச்சரியம் அதிகாரி போட்ட லாக் சுக்கு நூறாக உடைந்து சிதறிவிட்டது. போக்குவரது அதிகாரி இதனை சற்றும் எதிர்பார்கவில்லை. அவர் தலையில் கை வைக்கும் நிலை தான் தோன்றியுள்ளது.

http://www.athirvu.com/newsdetail/1696.html

பிலிபைன்ஸ் பாதாளக் குழு அங்கிருந்தபடியே லண்டன் இளைஞரைக் கொன்ற கதை: அதிரவைக்கிறது !

[ Dec 22, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 19920 ]
டானியல் பெரி என்னும் 17 வயது லண்டன் இளைஞரை, இன்ரர்நெட் ஊடாக தொடர்புகொண்டுள்ளது பிலிப்பைன்ஸ் நாட்டுக் கும்பல் ஒன்று. வெப் கமரா ஊடாக தோன்றிய பெண் ஒருவர், டானியலை உசுப்பிவிட்டுள்ளார். டானியலும் நிலைமை தெரியாமல், தன்னை நின்வாணமாக்கி அப்பெண்ணு கமரா மூலம் காட்டியுள்ளார். ஆனால் அவர் பெரும் சிக்கலில் மாட்டுக்கொள்ள இருப்பது அவருக்கே தெரியாது. இப்பெண் உட்பட சுமார் 20 பேர் இணைந்து இதுபோன்ற தொழிலை கூட்டாக செய்து வந்துள்ளார்கள். முதலில் கம்பியூட்டர் திரையில் வரும் அழகான பெண் பேசுவார். தனக்கு உடல் உறுப்புகளை காட்டுமாறு கேட்பார். அதனை அவரது குழுவினர் ரகசியமாக ரக்கோட் செய்துவிடுவார்கள்.
பின்னர் அதனைக் காட்டி அந்தக் கும்பல் குறித்த நபரை மிரட்டும். இதுபோலவே டானியலும் சிக்கிக்கொண்டார். 17 வயதான அந்த இளைஞர் என்னசெய்வது என்று தெரியாமல் இக் குழுவிடம் சிக்கி தவித்துள்ளார். அவர்கள் டானியலை பணம் கேட்டு மிரட்டியுள்ளார்கள். இல்லையென்றால் குடும்பத்தில் உள்ள அனைத்து உறவினர்களுக்கும் தாம் டானியலின் நிர்வாண புகைப்படத்தை அனுப்பிவிடுவோம் என்று மிரடியுள்ளார். இதனைச் சமாளிக்க முடியாத டானியல் கடந்த வருடம் தன்னை தானே மாய்த்துக்கொண்டான். இதனால் இவ்விடையம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட, பிரித்தானியப் பொலிசார் குறித்த கும்பலில் உள்ள நபர்களை தேடி அலைந்தார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டுப் பொலிசாரும் பிரித்தானிய பொலிசாருக்கு உதவிவந்தார்கள். அவர்கள் மொத்தமாக 20 பேரை தற்போது கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். இவர்கள் வலையில் டானியல் மட்டும் அல்ல, பலர் வீழ்ந்துள்ளார்கள் எனத் தெரியவருகிறது என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். 
http://www.athirvu.com/newsdetail/1697.html

No comments:

Post a Comment