Wednesday, October 22, 2014

கோண்டாவில் வரை வந்தது பரீட்சார்த்த ரயில்!

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று பிற்பகல் கோண்டாவில் ரயில் நிலையம் வரையான பரீட்சார்த்த ரயில் சேவை நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்த காங்கேசன்துறை வரையான ரயில் சேவையை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து கோண்டாவில் வரையான ரயில் பாதை அமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை சரிபார்க்கும் வண்ணம் பொருட்களை ஏற்றிய ரயில் கோண்டாவில் வரை வந்து திரும்பியுள்ளது.



இந்த வருட இறுதிக்குள் காங்கேசன்துறை வரையான ரயில் சேவையும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை வரையான ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ள போதிலும் பல இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் இடம்பெறவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.rain-Kondavil
http://www.jvpnews.com/srilanka/84654.html

No comments:

Post a Comment