Wednesday, September 10, 2014

மனித வெடிகுண்டுகளாய் சிறுவர்களை மாற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்! பகீர் தகவல் (வீடியோ இணைப்பு)

சிறுவர்களை தற்கொலை வெடிகுண்டாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய பிரதிநிதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஐ.நா. அமைப்பின் குழந்தைகள் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சிறப்பு பிரதிநிதி லெய்லா செரோக்கி (Laila Soroki) கூறியதாவது, ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஈராக்கில் 13 வயது கொண்ட சிறுவர்கள் ஆயுதம் ஏந்தி போரிடுவதுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்களை கைது செய்கின்றனர்.
மேலும் சிறுவர்கள் தற்கொலை வெடிகுண்டாகவும் பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் கடந்தாண்டில் மட்டும் சுமார் 700 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
5 குழந்தைகளை மண்ணில் புதைத்த தந்தையின் வெறிச்செயல்

No comments:

Post a Comment