வானளாவிய கட்டடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள செல்ஃபியே, உலகின் ஆபத்தான செல்ஃபி’ என கூறப்படுகிறது. ஹொங்கொங்கின் மிக உயர்ந்த கட்டடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் ‘செல்ஃபி’ எடுக்க முடிவு செய்த 3 இளைஞர்கள், ஹொங்கொங்கின் ஐந்தாவது மிக உயர்ந்த கட்டடமான ‘தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர்’ மீது ஏறி நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உயரம் 1,135 அடி ஆகும்.
மிகவும் சாதாரணமாக வாழைப்பழத்தை சாப்பிட்ட வண்ணம் அந்த உயரிய இராட்சத கட்டடத்திலிருந்து கீழே இறங்கும் காட்சியையும் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் ‘செல்ஃபி’ எடுக்கும் வீடியோ தான் தற்போது யூடியூபில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுகிறது. இதுவரையில் எடுக்கப்பட்ட ‘செல்ஃபி’ க்களில் இது தான் மிகவும் அச்சுறுத்தக் கூடியது என்று இணையவாசிகளால் கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/865.html
No comments:
Post a Comment