ஜேர்மன் சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர், 17.5 மில்லியன் பவுண்டு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹிட்லர் தன் வாழ்நாளில் எத்தனையோ வழிகளில் பணம் சம்பாதித்தார்.
தனது உருவத்துக்கு கூட காப்புரிமை பெற்றார். அதனால் அவரது உருவம் பொறித்த தபால்தலை விற்பனை மூலம் ராயல்டியாக அவருக்கு பணம் கிடைத்தது. மேலும், கூட்டங்களில் பேசுவது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் பணம் வசூலித்தார். ஆனால், இதற்கெல்லாம் அவர் வரி செலுத்த வில்லையாம்.
அந்தவகையில், அவர் 17.5 மில்லியன் பவுன்ட் வரி பாக்கி வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, அவர் எழுதிய உயிலின்படி அவரது சொத்துகளின் தற்போதைய மதிப்பு 36 ஆயிரம் கோடி ரூபா என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
|
No comments:
Post a Comment