இச்சம்பவம் பிற்பகல் 3-மணியளவில் 1600 பென்சில்வேனியா அவெனியுவில் இடம்பெற்றுள்ளது. இந்த இடம் வெள்ளை மாளிகையை பார்வையிட வரும் உல்லாச பயணிகளினாலும், ஆர்ப்பாட்டங்கள் நடாத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களாலும் நன்கு அறியப்பட்ட ஒரு இடமாகும்.
இந்நபர் மைக்கேல் பிச்சாட் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக யு.எஸ். இரகசிய சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறைந்தது நான்கு அதிகாரிகள் சேர்ந்து இவரை பிடித்து ஆடை ஒன்றினால் போரத்தி கைதுசெய்தனர்.
அதிபர் ஒபாமாவின் அட்டவணைப்படி அவர் சம்பவம் நடந்த போது வெள்ளை மாளிகையில் இருந்துள்ளார். ஆனால் கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் உத்தரவு பிறப்பிக்க படவில்லை.
அதிபர் ஒபாமா வாசிங்டன் டி.சி.யில் முன்னறிவித்தல் எதுவும் இன்றி தலைநகரை சுற்றி நடந்து மக்களையும் உல்லாசபயணிகளையும் ஆச்சரியப்படுத்திய தினத்திற்கு அடுத்த நாள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிபர் ஒபாமா வாசிங்டன் டி.சி.யில் முன்னறிவித்தல் எதுவும் இன்றி தலைநகரை சுற்றி நடந்து மக்களையும் உல்லாசபயணிகளையும் ஆச்சரியப்படுத்திய தினத்திற்கு அடுத்த நாள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment