யாழ். கோப்பாயினைச் சேர்ந்த ஒருவரினால் 300,000 ரூபா செலவில் யாழ். கல்வியங்காட்டு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 6 அடி உருவச்சிலை புதன்கிழமை (2) திறந்து வைக்கப்பட்டது.
யாழ். கல்வியங்காடு வைரவர் ஆலயத்திற்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புரட்சி தலைவரின் சிலையினை யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா திறந்து வைத்தார்.
இந்தச் சிலையினை இந்திய சிற்பக்கலைஞர் புருசோத்தமன் நிர்மாணித்திருந்தார்.
இந்நிகழ்வில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




 |
No comments:
Post a Comment