Monday, April 28, 2014

சுழிபுரம்-திருவடிநிலைக் கடலில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.04.2014) மீட்கப்பட்ட வைரவரின் கருங்கல் சிலை!!



சுழிபுரம்-திருவடிநிலைக் கடலில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (27.04.2014) வைரவரின் கருங்கல் சிலையொன்று மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி கடலில் நேற்று பிற்பகல் வட்டு. பிளவத்தை இளைஞர்கள் சிலர் குளித்துக்கொண்டிருந்தபோது கரையிலிருந்து சுமார் இருநூற்றைம்பது M தூரம் உள்ளே ஆழமான கடலில் இந்தச் சிலை கண்டெடுக்கப்பட்டது. வேட்டியால் சுற்றப்பட்ட நிலையிலிருந்து இந்தச் சிலை தொடர்பாக பொன்னாலை மற்றும் சுழிபுரம் மேற்கு இளைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சென்ற இளைஞர்கள் குறித்த சிலையை நேற்றிரவு 8 மணியளவில் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்திற்கு எடுத்துச் சென்று அங்குள்ள நரசிங்க சித்தர் சுவாமிகளின் பூசை வழிபாடுகளுடன் அந்த ஆலயத்தில் வைத்துள்ளனர்.



No comments:

Post a Comment