கடந்த புதன்கிழமையன்று இந்த பெண் போலீஸ், அவரது பெற்றோருடன் தேசிய நெடுஞ்சாலை 75 -ல் பயணம் செய்துக்கொண்டிருந்தார்.
அப்போது இவர்கள் சென்ற வாகனத்தை வழிமறித்த கொள்ளையர்கள் வாகனத்தில் இருந்த பொருட்களை திருடிக் கொண்டு, வாகனத்தில் இருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.
ராஞ்சி மற்றும் டல்டொங்கனஜ் பகுதிக்கு அருகே நடைபெற்ற இச்சம்பவம் ஒரு பெரிய அவமானத்திற்குரிய விஷயமென தெரிவித்த காவல்துறை உயர் அதிகாரி மைகேல், இம்மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் இத்தகைய கொள்ளை சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்றும், இனி இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழல் நிலவாத நிலையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதி அளித்துள்ளார்.
பலாத்கார சம்பவம் தொடர்பாக லடேகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
- See more at: http://tamilcloud.com/news/indian-female-constable-abused/#sthash.0o5zbrt7.dpuf
No comments:
Post a Comment