Saturday, July 27, 2013

கன்னத்தில் அறைந்த பெண் பொலிஸ் !




இந்தியாவில் உள்ள இன்டேரோ பார்க்கில் இருந்த காதலர்களை, பலர் பார்த்துக்கொண்டு இருக்கும்போது கன்னத்தில் அறைந்துள்ளார் ஒரு பெண் பொலிஸ். இவரை ரவுடிப் பொலிஸ் என்று தான் ஸ்டேஷனில் கூப்பிடுவார்களாம். ஏன் என்றால் ஏன் எதற்கு என்று கேட்க்காமல் உடனே கைவைப்பது இவர் பழக்கமாம். இதேபோல நேற்று முந்தினம் பார் ஒன்றுக்குச் சென்ற இவர் அங்கே ஆணும் ஒரு பெண்ணும் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்து ஆவேசப்பட்டு அவர்கள் அருகே சென்று கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார். அத்தோடு நின்றுவிடாது அப் பெண்ணின் கன்னத்தில் பல முறை ஓங்கி அடித்துள்ளார். இதனை தடுக்க வந்த காதலனையும் அவர் விட்டுவைக்க வில்லை. காதலனையும் தள்ளிவிட்டு , இப் பெண்ணை தாக்கியுள்ளார். 

ஆனால் சிறிது தூரத்துக்கு அப்பால் நின்ற சிலர் இதனை தமது மோபைல் போனில் புகைப்படமாக எடுத்துவிட்டார்கள். இந்த மேட்டர் குறிப்பிட்ட பெண் பொலிசுக்கு தெரியாது. இப் புகைப்படங்களை அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளார்கள். ஆனால் இதில் அதிர்சியான சம்பவம் என்னவென்றால், வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட ஒரு சிக்கலை தீர்த்துவைக்கவே அவ்விருவரும் அருகில் உள்ள பார்க் ஒன்றுக்குச் சென்று பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் உண்மையில் காதலர்கள் அல்ல ! ஆக மொத்தத்தில் இந்தப் பெண் பொலிஸ் தானே ஊகித்து, தானே ஒரு முடிவெடுத்து இவர்களை தாக்கியுள்ளார்.

பிரச்சனை பூதாகரமானதால் தற்போது மேலதிகாரிகள் இவரை விசாரித்து வருகின்றார்கள். அனேகமாக இவர் வேலையை இழக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment