Thursday, July 25, 2013

முத்தத்திற்கு மன்னிப்பு கோரினார் !


"வை திஸ் கொலைவெறி" என்ற பாடலை இசையமைத்து ஒரே இரவில் உலகப் புகழ்பெற்றவர் அனிருத் ஆவார். தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய "3" என்ற திரைப்படத்திற்கு பாடல் மற்றும் இசையமைக்க மிகவும் நெருக்கமாகப் பழகி வந்த நபர்கள் அனிருத் மற்றும் அன்ரியா ஆவர். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த இரவு நேரப் பாட்டியில், லேசான மதுபோதையில் அனிருத் அன்ரியாவை ஒருவாறு, முத்தமிட்டுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் கூடப் பரவாயில்லை, ஆனால் உதட்டோடு உதடுவைத்து அனிருத் முத்தமிட்டார். இதனை ஒரு மூன்றாவது நபர் தனது செல்போன் கமராவில் படம் பிடித்து வெளியிட்டார். அது இணையத்தில் ஒரு கலக்கு கலக்கியது யாவரும் அறிந்ததே. அதிலும் அன்ரியாவை விட அது அனிருத்துக்கே பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது.

அதனையே அனிருத் மிகவும் திட்டமிட்டு நேர்த்தியாகச் செய்து முடித்தார் என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. வை திஸ் கொலைவெறி பாடலூடாக என்ன தான் பெயரும் புகழும் கிடைத்தாலும், அனிருத் தோற்றம்(மெல்லிய மற்றும் எடுப்பு இல்லாத தேகம்) காரணமாக பெண்கள் அவரை கண்டுகொள்வது இல்லையாம். அதனால் தன்னுடன் நெருங்கிப் பழகிய அன்ரியாவை வைத்து அவர் சிறப்பான நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருந்தார். தான் அன்ரியாவை முத்தமிடும் காட்சியை படமாக எடுக்கச் சொன்னதே அவர்தான் என்றும் பேசப்படுகிறது. பின்னர் அதனை இணையத்தில் வெளியிட்டவரும் அவரே. இதனைப் பார்த்த பல பெண்கள் அனிருத் மீது மோகம்கொண்டார்கள். அனிருத் மிகவும் ஹாட் ஆன ஆண் என்று அவரை நேசித்தார்கள். இதனால் அவர் பெண்கள் மத்தியில் பிரபல்யமானார்.

இவை எல்லாமே சினிமா ஸ்டன் போலத் தான் நடந்துள்ளது. ஆனால் இதில் அதிர்சியில் ஆழ்ந்துபோனது யார் தெரியுமா ? அன்ரியா தான். இந்த புகைப்படம் வெளியான நாள் முதல் அவர் அனிருத்துடன் பேசுவதே இல்லை. தனுஷ் பல முறை சமாதானம் செய்ய முற்பட்டார். ஆனால் அன்ரியா நோ சொல்லிவிட்டார். ஆனால் தற்போது அனிருத் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். இதுவரை காலமும் அது பற்றி கேட்டவர்களிடம், ‘அது மிகவும் பழைய படம்’ என்ற ஒற்றை வரியில் தனது கருத்தை தெரிவித்திருந்தார் ஆண்ட்ரியா. ஆனால் தற்போது அன்ரியாவும் அனிருத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் எல்லாமே பப்பிளிசிட்டி ஸ்டன் தான் !

No comments:

Post a Comment