Saturday, April 6, 2013

பாரிய சத்தத்துடன் வானிலிருந்து வீழ்ந்தது மர்மப் பொருள்! சிலாபம் பகுதியில் பரபரப்பு


சிலாபம் பிரதேசத்தில் பள்ளம அம்பகெலே என்ற கிராமத்தில் வானிலிருந்து விழுந்துள்ள ஒரு மர்மப் பொருளினால் அக்கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
1 1/2 அடி நீளமான 6 அங்குலம் அகலமாக 7 கிலோ பாரமானதாக இந்த மர்மப்பொருள் இருந்துள்ளது.
அம்பகெலே கிராமத்திலுள்ள குமார என்பவரின் வீட்டுத் தோட்டத்திலுள்ள தென்னை மரத்தின் மீதே இந்தப் பொருள் விழுந்துள்ளது.
இது தொடர்பாக விளக்கமளித்த குமார தாம் வீட்டிலிருந்த சமயம் கேட்ட பாரிய சத்தத்தையடுத்து என்னவென்று பார்க்க தோட்டத்திற்குள் வந்தேன்.
அதன்போது வீட்டுக்கு அருகே உள்ள தென்னை மரத்தின் பகுதிகள் சேதமடைந்திருந்தன.
தொடர்ந்து பார்த்த போது மர்மப் பொருளொன்று விழுந்து கிடந்துள்ளது.
இரும்பு சட்டம் போன்ற அமைப்பில் அந்த பொருள் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிலாபம் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்திருப்பதாக குமார தெரிவித்தார்.
unknown_thing_001

No comments:

Post a Comment