இலங்கையில் துன்புறுத்தலுக்கு உட்படுகின்ற அல்லது உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக விண்ணப்பிக்கலாம் என்று பிரித்தானியாவின் குடிவரவுத்துறை அமைச்சின் பேச்சாளார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதுடன், பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படுகின்றவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் துன்புறுத்தப்படுகின்றமை ஏறத்தாழ உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கையர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அகதி அந்தஸ்துக்கான விண்ணப்பங்களை பிரித்தானிய குடிவரவு கட்டுப்பாட்டு சபை அவதானமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment