திரு நல்லதம்பி இராசக்கோன்(றாலாமி)
(Woodlands Company Manager)
பிறப்பு : 27 மே 1951 — இறப்பு : 31 சனவரி 2013
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி இராசக்கோன் அவர்கள் 31.01.2013 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார் .
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு அமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாஸ், சுமீரா, சுஜீவ் ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற விவேகானந்தன், பிரியதர்சினி, கிருபானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மனோகரன், தனுஷா, பிரகாஷ், பிரஜினி, மகிழினி, மனோஷ் ஆகியோரின் மாமனும்,
விஜயானந்தன், டினோசன், டினோபா ஆகியோரின் ஆசையப்பாவும்,
கனகலட்சுமி, மணிவாசகர், குகனேஸ்வரி, சாந்தலிங்கம், சிவராமலிங்கம், சுந்தரலிங்கம், பங்கயச்செல்வி, திருவருள், சரோயினிதேவி, காலஞ்சென்ற கணேசலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
அம்பிகைநாதன், சிவமோகன், ஜெயசங்கர், கமலாம்பிகை, மகாலட்சுமி, ராணி ஆகியோரின் சகலனும்,
தவராசா, சண்முகநாதன் ஆகியோரின் சம்பந்தியும்,
சஞ்சய், சாருஜன், சானுஜன், ரேவிதா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-02-2013 சனிக்கிழமை அன்றும், 03.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்றும் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 04-02-2013 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு ஈமைகிரியைகள் நடைபெற்று் பின்னர் 10:00 மணிக்கு கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|
No comments:
Post a Comment