Saturday, May 26, 2012

போதை பழக்கத்திற்கு ஆளானதால் பேரனை சுட்டுக் கொன்ற பாட்டி!



அமெரிக்காவில் உள்ள அரிசோனா நகரில் வசிக்கும் தம்பதிக்கு 17 வயதில் ஜோனாதன் ஹோப் என்ற மகன் இருந்தான். அவன் தனது பாட்டி சானதாலேயார்(74) வீட்டில் தங்கி பள்ளிக்கூடம் சென்று வந்தான்.
இந்நிலையில் அந்த சிறுவன் பொலிசாருக்கு டெலிபோனில் தொடர்பு கொண்டு, `என்னை பாட்டி துப்பாக்கியால் சுட்டு விட்டார். நான் சாகும் தருவாயில் இருக்கிறேன்' என்று கூறினான். உடனே பொலிசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்றனர். அதற்குள் சிறுவன் இறந்து விட்டான்.
இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்ததில் அவனுடைய பாட்டி தான் துப்பாக்கியால் 8 தடவை சுட்டு சிறுவனை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியையான அவரை பொலிசார் கைது செய்து புதிதாக வாங்கிய துப்பாக்கியையும் கைப்பற்றினர்.
பெற்றோரை பிரிந்த சிறுவன் பள்ளியில் சரிவர படிக்காமல் போதை பழக்கத்திற்கு ஆளானதால் ஆத்திரம் அடைந்த பாட்டி  இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது.

No comments:

Post a Comment