Friday, April 6, 2012

பிரிட்டனில் வரலாறு காணாத பனி பொழிவு!


பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்திலும், ஸ்காட்லாந்திலும் வரலாறு காணாத அளவிற்கு மிக அதிக அளவில் பணி பொழிவு ஏற்பட்டுள்ளது.
நிலத்திலிருந்து 10inch உயரத்திற்கு பனி சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதை தொடர்ந்து போக்குவரத்து அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது.
சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் பனிப்பொழிவால் தொடர்ந்து செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்று கொண்டிருக்கின்றன. இந்தப் பனிப்பொழிவால் விமான போக்குவரத்து அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பனியாளர்கள் தட்டுப்பாட்டால் 1.5மில்லியன் பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். மேலும் ஈஸ்டர் பண்டிகை, மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு விமான நிலையத்தில் மக்கள் அதிக அளவில் காத்திருக்கின்றனர்.
இந்த மோசமான பனிப்பொழிவால் தண்ணீர், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதுடன் சில இடங்களில் ஈரத்தால் சுவர்களும் இடிந்து விழுந்துள்ளன. வடக்கு வேல்ஸ் கடலில் பனிப்பொழிவால் சரக்கு கப்பல் ஒன்று நிலை தடுமாறி கடலில் கவிழ்ந்துள்ளது.
உச்சி பனிச்சறுக்கு விளையாடுவோற்கு மீண்டும் மலையுச்சியில் சுற்றுலா விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment