அண்மையில் திருநெல்வேலிப் பகுதியில் நபரொருவர் ஏலத்தில் விடப்பட்ட ஐரோப்பிய அரிய இன காளை மாட்டினை வாங்கி அதனை வெட்டுவதற்கு பெரியளவில் விளம்பரம் செய்து ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
அந்த வேளையில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மூலம் காளை மாட்டினை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் குறித்த காளை மாட்டினைக் கொள்வனவு செய்தவர் யாழ். நீதிமன்றத்தில் மாட்டினை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டமைக்கான காரணம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதனடிப்படையில் மேற்படி அழைப்பாணை நீதிமன்றத்தால் அனுப்பப்பட்டுள்ளது. காரணத்தை 30 ஆம் திகதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என யாழ். நீதிவான் மா.கணேசராசா பிரதி வாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment