Thursday, March 1, 2012

பிரித்தானியாவில் மனித உரிமைகள் ,தஞ்சமடைத்தவர்களை காட்டிக்கொடுப்பதுதான் மனிதநேயமா??


பிரித்தானியாவிலிருந்து பலத்த பாதுகாப்புடன் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய 52 இலங்கையரை கொண்ட மற்றுமொரு தொகுதியினர் 120 பிரித்தானிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பலத்த பாதுகாப்புடன் இன்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ளனர்.
பிரித்தானிய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளினால் நாடு கடத்தப்பட்ட இவர்கள் விசேட விமானமொன்றின் மூலம் ஹீத்துரூ விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 29 தமிழர்கள், 10 முஸ்லிம்கள் மற்றும் 13 சிங்களவர்கள் காணப்பட்டனர். இவர்களில் 45 ஆண்களும் ஏழு பெண்களும் உள்ளனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, களுவாஞ்சிக்குடி, திருகோணமலை, வத்தளை, வவுனியா மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இவர்கள், 30 – 40 வயது பிரிவுக்குட்பட்டவர்களாக காணப்பட்டனர்.
இவர்களில் சிலர் பிரித்தானியாவுக்கு மாணவர் விசாவில் சென்று விசா கலாவதியாகிய நிலையிலும் தங்கியிருந்தவர்களாவர். இன்னும் சிலர் இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக பிரித்தானியா சென்று தொழில் நடடிக்கையில் ஈடுபட்டவர்களாவர்.
சிலர் சுமார் 1 – 10 வருடங்கள் பிரித்தானியாவில் தொழில் புரிந்த பின் இவர்கள், நாடு திரும்புவதற்கு தயக்கம் காட்டியுள்ளனர்.
இதற்கு முன்னர், பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரிய 108 இலங்கையர்கள் இரண்டு தடவைகளாக நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் பிரித்தானிய அதிகாரிகள் கையளித்தனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் அரச புலனாய்வு பிரிவு ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment