Wednesday, February 29, 2012

பேஸ்புக்மூலம் தமிழ்பெண்ணை மோசடிசெய்த மதுரை வீரன் !!


தமிழ்நாடு மதுரை ஆவனியாபுரத்தினை சேர்ந்த சிவகுமார் என்பவல் இலங்கை தமிழ்பெண்ணான 35 அகவையுடைய சறோஜினிதேவியை பேஸ்புக் மூலம்காதலித்துவந்துள்ளார்.
மதுரைக்குவருமாறும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று சறோஜினியிடம் பேஸ்புக்மூலம் சிவகுமார் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் மதுரை கூடல் அழகப்பொருமாள் கோவிலில் 10.12.2011 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது இவர்கள் இருவரும் தொழில் செய்து பணம் சம்பாதிக்க சிங்கப்பூர்சென்று குடியேறியுள்ளனர் அங்கு சறோஜினியின் முக்கியமான பெறுமதியான பொருட்கள் விசாஅட்டைகள் மடிகணணிகள் என்பனவற்றை களவாடிக்கொண்டு சிவகுமார் தலைமறைவாகியுள்ளதாகவும் பின்னர் போலி பெயர்களில் பேஸ்புக்கில் வந்த சிவகுமார் சறோஜினியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளார் இந் ஏமாற்றச்சம்பவம் குறித்து மதுரை காவல்துறையில் சறோஜினி முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து இதுதொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment