இங்கிலாந்து நாட்டில் லண்டனின் கடலோரப் பகுதியில் உள்ள வெஸ்டன் என்ற இடத்தை சேர்ந்த இளம் காதலர்கள் இடையே உறவு முறிந்து போனது. எனவே மீண்டும் காதலியுடன் இணைவதற்காக காதலன் நூதன தூது விடும் முயற்சியை கையாண்டார். மேலும் இவர் இரவோடு இரவாக அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீட்டுச் சுவர்களில் 16 வகையான குறிப்பு வாசகங்களை பச்சை நிற பெயிண்டினல் எழுதி வந்தார். அதில் ஒன்று ”நாம் இருவரும் மிகவும் சிறந்த காதலர்கள்” என்றும், மற்றொரு குறிப்பில், ”நாம் காதலித்த இனிய நிகழ்வுகளையும், தவற விட்டதையும் இந்த நல்ல நேரத்தில் நினைத்து பார்க்க வேண்டும்” என எழுதி வைத்திருந்தார். ஆனால் காதலி இதனைப் பார்த்து மனம் மாறினாரா என்பது தெரியவில்லை. |
No comments:
Post a Comment