Tuesday, November 1, 2011

நடிகை ஐஸ்வர்யராய்க்கு இன்று 38வது பிறந்தநாள்



நடிகை ஐஸ்வர்யராய் இன்று தனது 38வது பிறந்தநாளை அவரது வீட்டில் பிரமாண்டமான விருந்து ஏற்பாடுகளுடன் கொண்டாடுகிறார்.
முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய் இன்று தனது 38வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
தாய்மையடைந்துள்ள அவரது பிறந்தநாளை பச்சன் குடும்பத்தினர் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.
மும்பையில் உள்ள அமிதாப் பச்சனின் வீட்டில் இன்று விருந்து கொடுக்கின்றனர்.
இந்த விருந்தில் குடும்பத்தினர், உறவினர்கள் தவிர திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
ஐஸ்வர்யா வீட்டில் இருக்கும் இந்த நாட்களை அமைதியான முறையில் கழித்துவருகிறார். குடும்பத்தார் அவரை அன்பாக கவனித்து வருகின்றனர்.
பிரசவ திகதி நெருங்குவதால் அவர் பதற்றமாக இல்லை, மாறாக சந்தோஷமாக உள்ளார் என்று அவருக்கு நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யாவுக்கு இந்த மாதத்தின் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இன்றைக்கே குழந்தை பிறந்துவிட்டால் அம்மாவுக்கும், பிள்ளைக்கும் ஒரே பிறந்த நாளாக இருக்குமே என்றும் சிலர் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment