சுவிஸில் பாடசாலை சென்ற இலங்கைச் சிறுவன் லொறி மோதி பரிதாபச் சாவு! அன்னை மடியில் : 28 ஒக்ரோபர் 2003 , ஆண்டவன் அடியில் : 2 நவம்பர் 2011 |
|
சுவிஸ் விபத்தில் தமிழ் சிறுவன் உயிரிழப்பு!
[ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 07:31.59 AM GMT ]
சுவிஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் யாழ். மீசாலையைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுவன் உயிரிழந்தான்.
இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது. பனிமூட்டம் காணப்பட்ட வேளையில் வீதியில் பாதசாரிக் கடவையின் ஊடாக நடந்து சென்ற சிறுவனை வேகமாக வந்த வாகனம் மோதியதையடுத்தே சிறுவன் உயிரிழந்துள்ளான் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
5 நாட்களுக்கு முன்னர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ள ஆகரன் எனும் சிறுவன் பாதசாரிகளுக்கான கடவையில் சென்று கொண்டிருந்தபோது பின்நோக்கி செலுத்தப்பட்ட பாரஊர்தி அவரை மோதியுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு ஆகரனின் தந்தை திலிபன் கூறுகையில் தனது மகனை வாகன ஓட்டுநர்கள் தெளிவாக கண்டு கொள்ளவேண்டுமென்பதற்காக ஒரேஞ் நிறத்திலான JACKET ஒன்றும் சிவப்பு நிறத்திலான சப்பாத்தும் வாங்கிகொடுத்தும் இவ்வாறு நடந்து விட்டது என கவலை தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அண்மையில் ஆகரனின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் விபத்து தொடர்பில் அந்நாட்டு பத்திரிகை இவ்வாறு தெரிவிக்கின்றது. (20min.ch)
5 நாட்களுக்கு முன்னர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ள ஆகரன் எனும் சிறுவன் பாதசாரிகளுக்கான கடவையில் சென்று கொண்டிருந்தபோது பின்நோக்கி செலுத்தப்பட்ட பாரஊர்தி அவரை மோதியுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு ஆகரனின் தந்தை திலிபன் கூறுகையில் தனது மகனை வாகன ஓட்டுநர்கள் தெளிவாக கண்டு கொள்ளவேண்டுமென்பதற்காக ஒரேஞ் நிறத்திலான JACKET ஒன்றும் சிவப்பு நிறத்திலான சப்பாத்தும் வாங்கிகொடுத்தும் இவ்வாறு நடந்து விட்டது என கவலை தெரிவித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அண்மையில் ஆகரனின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்திகள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் விபத்து தொடர்பில் அந்நாட்டு பத்திரிகை இவ்வாறு தெரிவிக்கின்றது. (20min.ch)
No comments:
Post a Comment