Wednesday, August 24, 2011

மாணவியுடன் விடுதியில் இருந்த உ.க.பணிப்பாளர் பணிநீக்கம் !

24 August, 2011
உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவி ஒருவருடன் விடுதி ஒன்றில் தங்கிருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஹட்டன் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த உதவிக் கல்விப் பணிப்பாளர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் விஜயசிறி ஹேரத் உறுதி செய்துள்ளார். கடந்த வருடம் உயர்தர பரீட்சை எழுதி மாணவி ஒருவருடன் கட்டுகஸ்தோட்டையிலுள்ள விடுதி ஒன்றில் வைத்து குறித்த உதவிக் கல்விப் பணிப்பாளர் வசமாக அகப்பட்டார்.

58 வயதான குறித்த நபர் சம்பந்தப்பட்ட பெண் 10ம் தரத்தில் கல்வி பயிலும்போதே அவருடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய பெண் 18 வயதுக்கும் மேற்பட்டவர் என்பதால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது பொலிஸார் அவரை விடுவித்துள்ளனர்.

No comments:

Post a Comment