Friday, August 5, 2011

ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி

[ வெள்ளிக்கிழமை, 05 ஓகஸ்ட் 2011, 10:25.15 AM GMT ]
ஜேர்மனி தேசத்தில் அண்மையில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியொன்றில் முதலிடத்தைப் பெற்று அதி திறமையுள்ளவராக  ஈழத்தமிழ் மாணவி செல்வி சரிகா சிவநாதன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் வேல்பெனின் மாநிலத்தில்  பொன் நகரத்தில் தனது பெற்றோருடன் வசிக்கும் மேற்படிச் செல்வி சரிகா அண்மையில் ஜேர்மன் மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியொன்றில் முதல்பரிசைப் பெற்று சிறந்த திறமையுள்ள மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரைப் பாராட்டும் முகமாக பொன் நகர மேயர் மாறியோ லோ தமது நகரத்தின் அதி திறமையுள்ள மாணவியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து பாராட்டுக் கேடயமும் வழங்கி கௌரவித்தார்.
இங்கே காணப்படும் படத்தில் செல்வி சரிகா ஜேர்மனியின் பொன் நகரத்து மேயருடன் காணப்படுகின்றார்.

No comments:

Post a Comment