Wednesday, July 4, 2018

யாழில் தலைவிரித்தாடும் வாள்வெட்டுக் கலாச்சாரம்!


யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுத்ததால் தாக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூகமுடி அணிந்துவந்த அடையாளம் தெரியாத நபர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், இளைஞர் ஒருவரை கூரிய ஆயுத்ததால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொக்குவில் மேற்குப் பகுதியில் வசிக்கின்ற எஸ்.சத்தியதாஸ் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு தனிப்பட்ட பகையே காரணம் என தெரியவந்துள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை சுன்னாகம் பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட குப்பிளான் தெற்கில் 15 வயதான சி.சாருஜன் என்பவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
நேற்றிரவு 9-00 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 8 பேரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வாளால்வெட்டி காயப்படுத்தப்பட்ட சிறுவன், ஆவாக்குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவரின் ஒன்றுவிட்ட தம்பி என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.ibctamil.com/srilanka/80/102845?ref=imp-news

No comments:

Post a Comment