இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்.பஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பஸ்சுக்காக காத்து இருந்த இளம் பெண் முன்பாக , மேற்குறிப்பிட்ட முதியவர் தடக்கி விழுவதுபோல நடத்துள்ளார். அப் பெண்ணும் அவர் பாவம் என நினைத்து உதவ முயற்சித்தவேளை அவர் அங்க சேஷ்டையில் ஈடுபட்டதோடு சட்டென்று அப்பெண்ணை முத்தமிடவும் முயன்றுள்ளார். இந்த முதியவரின் செயற்பாட்டால் நிலைகுலைந்த இளம் பெண் கூக்குரல் எழுப்பியுள்ளார். பஸ்சுக்காக காத்து நின்றவர்கள் முதியவரை கவனிக்கவேண்டிய முறையில் கவனித்துள்ளார்கள். இப்பெண் தனக்கு நடந்த சம்பவத்தை பொலிஸ் நிலையம் சென்று தெரிவிக்க விரும்பாத நிலையில், அங்கு நின்ற ஆட்டே ஒன்றில் ஏறிச் சென்றுவிட்டார்.
இளம் பெண்ணை முத்தமிடமுயன்ற, முதியவர் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment