மேலும் புதிய தொழில் தொடங்க போவதாகவும் மாமனார் வீட்டில் பணம் வாங்கி வருமாறும் தனது மனைவியிடம் கூறியுள்ளார். அதன்பேரில் தனது தந்தை வீட்டில் இருந்து ரூ.7 லட்சம் பணம் வாங்கி நஸ்ரீன் பாத்திமா தனது கணவரிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால் தான் வெளிநாடு செல்ல போவதாகவும், அதற்கு பணம் வாங்கி தருமாறும் கூறியுள்ளார். அதற்கும் பணம் ஏற்பாடு செய்து கொடுத்து தற்போது முகமது இஸ்மாயில் வெளிநாடு சென்றுவிட்டார்.
வீட்டில் தனியாக இருக்கும் நஸ்ரீன் பாத்திமாவை அவரது கொழுந்தன் பக்ரூதின், உறவினர் காதர்மைதீன் ஆகியோர் தனது ஆசைக்கு இணங்கும்படி செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து தனது மாமனார் அப்துல் காதர், மாமியார் நசீமாபேகம் ஆகியோரிடம் கூறியபோது உனது கணவர் தான் வெளியூர் சென்று விட்டாரே? எனவே கொழுந்தனுடன் அனுசரித்து இருந்து கொள் என்று கூறியுள்ளனர். எனவே இதுகுறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நஸ்ரீன் பாத்திமா புகார் செய்தார். புகாரின்பேரில், மாமனார், மாமியார் கொழுந்தன் உள்பட 6 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment