Saturday, July 27, 2013

சித்தியை கர்ப்பமாகிய இளைஞன்: பொலிஸ் அழைப்பாணைக்கு பயந்து தற்கொலை!

பொலிஸ் அழைப்­பா­ணைக்கு பயந்து இளைஞன் ஒருவன் கிரு­மி­நா­சினி அருந்தி தற்­கொலை செய்­துள்ளான். இச்­சம்­பவம் மொன­ரா­கலைப் பகு­தியில், தம்­ப­கல்ல என்ற இடத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றுள்­ளது. தம்­ப­கல்­லையைச் சேர்ந்த 23 வயது நிரம்­பிய இளை­ஞனே கிரு­மி­நா­சினி அருந்தி தற்­கொலை செய்து கொண்­ட­வ­ராவார்.

இது பற்றி தெரியவருவது,

தம்­ப­கல்­லையைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் குறிப்­பிட்ட இளை­ஞனால் தான் மூன்று மாதக் கர்ப்­பி­ணி­யாக இருப்­ப­தா­கவும் தன்னை அவ்­வி­ளைஞன் திரு­மணம் செய்ய மறுப்­ப­தா­க­வும் தம்­ப­கல்லை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­தி­ருந்தார். இம்­மு­றைப்­பாட்­டினை விசா­ரணை செய்ய இளை­ஞனை பொலிஸ் நிலையம் வரு­மாறு பொலிஸ் அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இதற்குப் பயந்து அவ் இளைஞன் பொலிஸ் நிலையம் வரு­மாறு குறிப்­பிட்ட தினத்தில் கிரு­மி­நா­சினி அருந்­தி­யுள்ளான்.

உட­ன­டி­யாக அவ்­இ­ளைஞன் தம்­ப­கல்லை அர­சினர் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பல­னின்றி மர­ண­மானான். இது தொடர்­பாக நடை­பெற்ற மரண விசா­ர­ணை­யின்­போது சாட்­சி­யங்­க­ளி­லி­ருந்து மேற்­கண்ட விடயம் தெரி­ய­வந்­துள்­ளது. இறு­தியில் மரண விசா­ரணை அதி­காரி பி.எச்.கே. அப்­பு­ஹாமி பொலிஸ் நிலையம் சென்றால் தமக்கு பாதிப்பு ஏற்பட்டு விடுமென்ற பயத்தினாலேயே கிருமிநாசினி அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளாரென்று தீர்ப்பு வழங்கினார்.

இதேவேளை குறித்த இளைஞனால் கர்ப்பமாகியுள்ளதாக கூறப்படும் பெண் உறவு முறையில் அவருக்கு சித்தி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment