Saturday, April 7, 2012

மகளை ஓநாய்க் கூண்டில் அடைத்து வைத்த கொடூர தந்தை !


துணிச்சலுடன் வளர்க்க ஓநாய் கூண்டில் 9 வயது மகளை அடைத்து வைத்த தந்தையால் சீனாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சீனாவில் குழந்தைகளை துணிச்சலுடன் வளர்க்க பெற்றோர் பலவித சித்ரவதைக்கு ஆளாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. நியூயார்க் நகரில் வசிக்கும் சீனர் ஒருவர் தனது 6 வயது மகனை கொட்டும் பனியில் வெறும் ஜட்டியுடன் ஓடவிட்டு பயிற்சி அளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் 9 வயது மகளை ஓநாய்களுடன் கூண்டில் அடைத்து பயிற்சி அளித்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ளது ரும்கி. இந்நகரில் செல்ல பிராணிகள் கண்காட்சி நடந்தது. இங்கு 2 ஓநாய்கள் அடைக்கப்பட்ட கூண்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த கூண்டில் 9 வயது சிறுமி ஸு லின் என்ற சிறுமியும் அடைக்கப்பட்டிருந்தாள்.
இதுகுறித்து அவளது தந்தை ஸு யாங்ஷெங் கூறுகையில், என் மகள் துணிச்சலுடன் வளர வேண்டும். அதற்காகதான் இந்த பயிற்சி. ஆனால், நான் கொடூரமானவன் என்று சிலர் கூறுகின்றனர் என்று சாதாரணமாக கூறினார்.
ஓநாய்களுடன் கூண்டில் சிறுமி இருக்கும் படம் இன்டர்நெட்டில் வெளியாகி உள்ளது. இதையடுத்து சிறுமியின் தந்தைக்கு பல தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாய் மற்றும் ஓநாய்களுக்கு பயிற்சி அளிக்கும் தொழில் செய்து வருகிறார் ஸுயாங் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment