Tuesday, July 17, 2018

பிரித்தானியாவில் இலங்கையரின் அகதித்தஞ்சம் புதிய அறிக்கை கூறுவதென்ன?

பிரித்தானியா வெளியிட்ட 2017ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் மனிதஉரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தவிடயத்தை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயமும் உறுதிப்படுத்தியுள்ளது.
மனித உரிமை நிலவரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய நாடுகள் என பட்டியலிடப்பட்ட மொத்தம்30நாடுகளில் இலங்கையும் ஒருநாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் மனிதஉரிமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் காட்டப்படும் மெத்தனப்போக்குக்குறித்தும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவே வெளியிட்ட மனிதஉரிமை அறிக்கையில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நாடாக இலங்கையும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதால் அகதித்தஞ்சம் கோரி உள்துறை அமைச்சின் இறுதி முடிவுக்காக காத்திருப்போருக்கு கொஞ்சம் சாதக நிலைமை ஏற்படலாமென ஊகிக்கப்படுகிறது.

https://www.ibctamil.com/uk/80/103407?ref=ls_d_ibc

No comments:

Post a Comment