Friday, June 22, 2018

கதறி அழுத பச்சிளம் குழந்தை.. ஓங்கி அறைந்த பாதிரியார்.. வீடியோ உள்ளே!


அழுது கொண்டிருந்த குழந்தையை, பாதிரியார் ஒருவர் கோபமடைந்து கன்னத்தில் அறையும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிரெஞ்சு மொழி பேசும் பாதிரியார் ஒருவர், ஆலயத்தில் குழந்தை ஒன்றிற்கு ஞானஸ்தானம் கொடுப்பதற்காக தயார் நிலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த குழந்தை சத்தமாக கதறி அழுதுகொண்டிருந்தது. உடனே அந்த பாதிரியார் அமைதியாக இருக்குமாறு அந்த குழந்தையை கண்டித்து, குழந்தையின் தலைப்பகுதியை தன்னுடைய உடல்மேல் சாய்த்து சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.


ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிய, குழந்தை இன்னும் சத்தமாக அழ ஆரம்பித்தது. இதனால் கோபமடைந்த பாதிரியார் பொறுமையிழந்து, குழந்தையின் கன்னத்தில் பட்டென்று அறைகிறார்.
இதனை பார்த்து, அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும்பொழுது, குழந்தை வலி தாங்க முடியாமல் மேலும் கதறி அழ ஆரம்பிக்கிறது.
இதனையடுத்து மீண்டும் பாதிரியார் குழந்தையை சமாதானம் செய்ய செய்யும்பொழுது, கையை மட்டும் அசைத்துக்கொண்டு குழந்தை துடிதுடித்து அழ ஆரம்பிக்கிறது.
இதனை பார்த்து கோபமடைந்த குழந்தையின் தந்தை, பாதிரியாரின் கைகளில் இருந்து குழந்தையை வேகமாக பறித்துகொண்டு, அங்கிருந்து கிளம்புவதைபோல் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.

http://news.lankasri.com/othercountries/03/181643?ref=ls_d_special

No comments:

Post a Comment