Monday, May 14, 2018

நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை: இவர் மீது சந்தேகம் என காவல்துறை ஆணையர் திடுக்கிடும் புகார்


நடிகை ஸ்ரீதேவியின் மரணம் திட்டமிட்ட கொலை என்று டெல்லி காவல்துறையின் முன்னாள் உதவி ஆணையர் வேத் பூஷண் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வேத் பூஷண் கூறுகையில், ஸ்ரீதேவி தண்ணீரில் மூழ்கி இறந்ததாக வெளிவந்த செய்தி உண்மையானது அல்ல, 5.7 அடி உயரம் கொண்டவர் ஸ்ரீதேவி என்றும், ஆனால், தண்ணீர் தொட்டியின் உயரம் 5.1 அடி மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக துபாய், மும்பை, டெல்லி, லக்னோ போன்ற இடங்களுக்குச் சென்று தனிப்பட்ட முறையில் தாம் விசாரணை நடத்தியதாகவும் வேத் தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகை ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்ப சாட்சிகள் உள்ளதாகக் கூறியுள்ள வேத் பூஷன், அவற்றை அடிப்படையாகக் கொண்டு தாம் நீதிமன்றத்தை நாட உள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் யார் மீதும் தான் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்றும் அதேநேரத்தில் தாவூத் இப்ராஹிம் மீதான சந்தேகத்தை தான் நிராகரிக்கவில்லை என்றும் வேத் பூஷன் தெரிவித்துள்ளார்.


http://news.lankasri.com/india/03/178722?ref=ls_d_special

No comments:

Post a Comment