Wednesday, April 25, 2018

இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப் !


H1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி வேலை செய்ய வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு தீர்மானித்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த முடிவால் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்காணவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
H1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு சிறப்பு சலுகையாக H4 என்ற விசா வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அவர்களும் அமெரிக்காவில் பணியாற்ற முடியும்.
முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான அரசாங்கத்தினால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தினால் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பலரும் பயனடைந்து வந்தனர்.
இந்நிலையில், அமெரிக்க நாட்டவர்களுக்கு முன்னுரிமை என்ற ரீதியில் செயற்பட்டு வரும் ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் H1B விசா நடைமுறையில் மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில், H4 விசா வைத்திருப்பவர்கள் பணி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.canadamirror.com/special/01/180829?ref=ls_d_special

No comments:

Post a Comment