Monday, April 30, 2018

உயிரை பணயம் வைத்து 65 வயது முதியவர் செய்த துணிச்சலான செயல்: நெகிழ்ச்சி சம்பவம்


ராமேஸ்வர கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 3 பெண்கள் கடல் அலையில் சிக்கியபோது 65 வயது முதியவர் தனது உயிரை பணயம் வைத்து அவர்களை காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த துளசி என்பவரை திடீரென எழுந்த கடல் அலை இழுத்துச் சென்றது.
இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணும், துளசியின் உறவினரான அபிநயா என்ற பெண்ணும் அவரைக் காப்பாற்ற கடலில் இறங்கியுள்ளனர்.
காப்பாற்றச் சென்ற இருவரும் கடல் அலையில் சிக்கியுள்ளனர். இதனையடுத்து கடல் அலையில் சிக்கி தவித்த 3 பெண்களும் தங்களைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர்.
இதனைக் கேட்ட அந்த வழியே வந்த கருப்பையா என்ற 65 வயது முதியவர் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்குள் சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பெண்களையும் சமயோசிதமாக காப்பாற்றிக் கரை சேர்த்தார்.
3 பெண்களைக் காப்பாற்றிய அவருக்கு உயிர் பிழைத்த குடும்பத்தினர் சன்மானம் கொடுக்க முன்வந்தனர். ஆனால் இதனை ஏற்கக் கருப்பையா மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து அந்தக் குடும்பத்தினர் கருப்பையாவுக்கு கண்ணீருடன் நன்றி கூறியுள்ளனர்.


http://news.lankasri.com/india/03/177652?ref=ls_d_india

No comments:

Post a Comment