Wednesday, January 17, 2018

திருமணமானவர்கள் தம்பதிகள் மட்டும் படிக்கவும்!


நீங்கள் உங்கள் வாழ்வில் முக்கியமான நாட்களாக கருதும் நேரங்களில் தாம்பத்தியம் வைத்துக் கொள்வது உங்கள் மனநிலையை மேன்மைப்படுத்தும். நீங்கள் அலுவலக வேலையாக ஏதேனும் முக்கிய சந்திப்புகளுக்கு போகும் முன்னர் அல்லது நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால் முக்கியபோட்டிகளில் பங்குப் பெறும் முன்னர் தாம்பத்தியம் கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்தும், மனஅழுத்தத்தை குறைக்கும். எனவே, நீங்கள் நல்லமுறையில் செயல்பட தாம்பத்தியம் வைத்துக் கொள்வது உதவும்.
காலை பொழுதுகளில் நீங்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்வதன் மூலம், உங்களது இரத்த கொதிப்பு குறைகிறது மற்றும் மனஅழுத்தம் நீங்குகிறது என ஆராய்ச்சி செய்து கண்டறிந்துள்ளனர்.
தாம்பத்தியம் வைத்துக்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே, சாதாரண காய்ச்சல், சளிபோன்ற சாதாரண நோய்களால் உங்களது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் போது, தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் காண இயலும்.
பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் 14 நாளில் கரு 20 % பெரியதாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்குமாம். எனவே, கருத்தரிக்க விரும்புவர்கள் அந்த நாளில் உடலுறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டு.
உடற்பயிற்ச்சி செய்த பின்னர் உங்களது இரத்த ஓட்டம் நல்ல சீரடைகிறது. இதனால் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அதிகரிக்கும். இதனால், உடற்பயிற்சி செய்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது நன்கு இனிமை காண இயலும் என கூறப்படுகிறது.

ஏதேனும் காரணமாக நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், அதிலிருந்து வெளி வர தாம்பத்தியம் வைத்துக் கொள்வது நல்ல பயன் தரும். இது உங்களது மன இறுக்கத்தை குறைக்கிறது.
சிலதருணங்களில் ஏதேனும் சில காரணங்களுக்காக நீங்கள் அச்சப்படநேரிடும். அதுபோன்ற உணர்வுகளில் இருந்து எளிதாக வெளி வரவேண்டும் எனில் தாம்பத்தியத்தில் ஈடுப்படுவது சரியான தீர்வு என கூறப்படுகிறது.

http://www.manithan.com/lifestyle/04/157776

No comments:

Post a Comment