Wednesday, January 17, 2018

அவுஸ்திரேலியாவில் 100வது பிறந்தநாளை கொண்டாடிய இலங்கை பெண்


அவுஸ்திரேலியா Westmeadows பகுதியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
அல்பிராரெட் கருணாநாயக்க என்ற பெண்ணே இவ்வாறு தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
தேங்காய் நீரைக் குடித்து, புதிய பழங்களை சாப்பிடுவதன் மூலமே தான் இவ்வளவு ஆரோக்கியமாக இருப்பதாக கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதிகமாக சிரிப்பதாகவும், தோட்டத்தில் அதிக நேரம் செலவிடுவதும், நாளை குறித்து கவலைப்படாமல் இருப்பதே தனது ஆரோக்கியத்திற்கான இரகசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநாயக்க இலங்கையில் பிறந்த ஒருவராகும், அவர் தோட்டம் மற்றும் சமையல் கலையில் பேரார்வமிக்க ஒருவராக காணப்பட்டுள்ளார்.
தனது தாயார் ஒரு நல்ல மனைவி மற்றும் அம்மா என அவரது மகள் தக்ஷி்னி தெரிவித்துள்ளார். தோட்டத்திலேயே தனது நேரத்தை அதிகமாக அவர் செலவிடுவார். காலை 10 மணியில் இருந்து மாலை வரை அவரை தோட்டத்திலேயே காண முடியும். பூக்கள் மற்றும் மரக்கறிகளை வளர்ப்பத்தில் அவர் அதிக கவனத்தை செலுத்துவார்.
அத்துடன் கோழிகள் வளர்த்து முட்டைகளை விற்பனை செய்யவும், தேவையான நேரங்களில் வீட்டு பயன்பாட்டிற்கும் அவர் எடுத்து கொண்டார் என அவரது மகள் தெரிவித்துள்ளார்.
1984ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்ற கருணாநாயாக்க தனது 3 மகள்களுடன் அங்கு வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



http://www.tamilwin.com/australia/01/171199?ref=recommended3

No comments:

Post a Comment