Saturday, December 16, 2017

உறவுக்கு ஒத்துழைக்காத பெண் ராஜநாகத்தை விழுங்க முயன்ற ஆண் ராஜநாகம்

தென்மலையில் பெண் ராஜநாகத்தை ஆண் ராஜநாகம் விழுங்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜநாகங்கள் பாம்புகளை உணவாக உட்கொள்வது வழக்கம், உறவின் போது ஒத்துழைக்காக பெண் ராஜநாகங்களை ஆண் நாகங்கள் தாக்கும், ஆனால் விழுங்கும் அளவுக்கு கொடூரமாக இருக்காது.
இந்நிலையில் செங்கோட்டையை அடுத்த தென்மலையில் வீட்டுக்குள் புகுந்த இரண்டு ராஜநாகங்கள் சண்டையிட்டுள்ளன, அப்போது பெண் ராஜநாகத்தை ஆண் ராஜநாகம் விழுங்க முயன்றுள்ளது.
இதை பார்த்தவர்கள் பாம்புகளை பிடிக்கும் வாவா சுரேஷ்க்கு தகவல் அளிக்க, விரைந்து வந்தவர் பாம்புகளை பிடித்தார்.
அவர் கூறுகையில், ஆண் ராஜநாகத்துக்கு எட்டு வயதாகிறது, பெண்ணுக்கு மூன்று வயதாகிறது.
பெண் ராஜநாகத்தின் உடலில் காயங்கள் இருந்தாலும் உயிருக்கு ஆபத்தில்லை.
பெண் ராஜநாகம் உறவுக்கு ஒத்துழைக்காததால் இச்சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

http://news.lankasri.com/india/03/167625

No comments:

Post a Comment