Thursday, November 23, 2017

24-11-2017 இந்த நாளை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்


வருகிற 24-11-2017 சஷ்டி. பொதுவாக ஐப்பசி மாதம் வரும் சஷ்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விரத நாட்களை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அப்படி ஏன்ன சிறப்பு?
சஷ்டியின் போது நீங்கள் 6 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்தால் நடக்கும் செயல்கள் இங்கு தெரிந்திக்கொள்ளுங்கள். இந்த 6 நாட்கள் சரியாக விரதம் இருந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைபேறு பாக்கியம் உண்டாகும்.
அந்த விரதம் இருக்க முயாதவர்கள் வருகிற 24-11-2017 ஆம் தேதி விரதம் இருந்தால் அதன் பலனை பெற்றுக்கொள்ளலாம்.
விரதம் இருக்கும் நபர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை:
காலையில் எழுந்து முருகனை ட்தரிசித்து அன்று முழுவதும் முருகப்பெருமானை நினைத்து கொண்டே இருக்கவேண்டும். பிறகு மாலையில் ஒரு முறை கோவிலுக்கு சென்று முருகனை வழிப்பட்டு இரவு உணவு அருந்தலாம்.
உமில் நீர்கூட விழுங்காமல் இந்த நாளில் விரதம் இருந்தால் இந்த பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும்.
மாற்றுவழி:
வேலைக்கு செல்பவர்கள் எல்லாம் இப்படி விரதம் இருக்க முடியாது. எனவே இதற்கான மாற்று வழி ஒன்றும் உள்ளது. விரத நாளில் 6 மிளகையும், 6 கை நீரையும் அருந்தி இந்த பலன்களை பெறலாம்.
சரியான வேலை இல்லாதவர்கள், தேர்வுகளுக்கு தயார் செய்து கொள்பவர்கள், பத்திர பதிவு கஷ்டத்தில் உள்ளவர்கள், வீடு கட்ட அஸ்திரவாரம் போட்ட பின் பாதியில் தடைபட்டவர்கள், புதிய இடம் வாங்க நினைப்பவர்கள், தொழில் மேன்மை அடைய விரும்புபவர்கள், குடும்பம் வறுமையில் இருப்பவர்கள் என அனைவரும் இந்த விரதம் செய்தால் பலன் கிடைக்கும்.
இக்குறிப்பிட்ட விரதத்தை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கடைப்பிடிக்களாம்.

http://www.manithan.com/spiritual/04/150939

No comments:

Post a Comment