சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
27 வயதான தயாகரன் கந்தசாமி என்பவர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த தயாகரன், சுவிட்சர்லாந்தின் லுசர்ண் நகரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ரயிலில் பாய்ந்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/community/01/154966
No comments:
Post a Comment