அமெரிக்க நாசகாரி கப்பலான யூ.எஸ்.எஸ். டொனால்ட் குக் பல வருடங்களுக்கு முன்னர் கருங்கடலில் பயணித்த போது, ரஷ்ய விமானமொன்றின் மூலம் மேற்படி இலத்திரனியல் போர் முறைமை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதையடுத்து அந்தக் கப்பலானது செயற்பட முடியாத நிலைக்குள்ளானதாக அந்த ஊடகம் தெரிவிக்கிறது.
அந்த வகையில் எந்தவொரு கப்பலிலிருந்தும் ராடர் கருவியிலிருந்தும் செய்மதிக்கு அனுப்பப்படும் சமிக்ஞையை கண்டறிந்து அதனை குறுக்கீடு செய்து செயலற்றதாக்கும் வல்லமையை ரஷ்யா கொண்டுள்ளதால் அந்தக் கப்பல்கள் தமது இலக்குகளை அடையாளம் கண்டு தாக்குதல்களை மேற்கொள்வது சாத்தியமற்றதாகி விடும் என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த பிந்திய இலத்திரனியல் போர் உபகரணத் தொகுதியான கிபினியை உள்ளடக்கிய அந்நாட்டு விமானமானது அதி சக்தி வாய்ந்த இலத்திரனியல் அலைகளைப் பிரயோகித்து போர்க் கப்பல்களின் இலத்திரனியல் முறைமைகளையும் சமிக்ஞைகளையும் கண்டறிந்து செயலற்றதாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதாக அந்த ரஷ்ய ஊடகம் தெரிவித்துள்ளது.
“போர் ஒன்றில் வெல்வதற்கு விலையுயர்ந்த ஆயுதங்கள் தேவையில்லை. அதிசக்தி வாய்ந்த வானொலி இலத்திரனியல் நெருக்கடி முறைமை போதுமானதாகும்” என அந்த ஊடகம் உரிமைகோரியுள்ளது.
இந்த இலத்திரனியல் நெருக்கடி முறைமையானது அமெரிக்க கப்பல்கள், ஏவுகணைகள், விமானங்கள் என்பவற்றில் பொருத்தப்பட்டுள்ள இலத்திரனியல் உபகரணங்களை முழுமையாக செயலற்றதாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளதால் அவை செயற்பட முடியாத நிலைக்குள்ளாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/231248.html
No comments:
Post a Comment