Wednesday, June 22, 2016

மாணவிகளுடன் தகாத முறையில் நடக்க முயன்ற ஆசிரியர் கைது!

யாழ்.பெரியபுலம் பாடசாலையில் மாணவிகளுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தகுற்றச்சாட்டில் குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது டன், மேலும்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
குறித்த பாடசாலையில் தரம் 7ல் கல்வி கற்கும் மாணவிகளுடன் தகாத முறையில்நடந்து கொண்ட மை தொடர்பாக பெற்றோர் மற்று ம் மாணவர்கள் ஆசிரியர்கள் முறைப்பாடு செய்துள்ளதுடன், மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினையும் இன்றையதினம் காலை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் கு றித்த சம்பவம் தொடர்பில் பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அதிபர் மற்றும்ஒரு பெண் ஆசிரியை ஆகியோரை தேடி வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment