Saturday, June 18, 2016

இருக்கையில் அமர்ந்திருந்த இளவரசர் வில்லியமை திட்டி எழுப்பிய பிரித்தானிய மகாராணி

பிரித்தானியாவில் தன்னுடைய பிறந்த நாள் நிகழ்ச்சியில் தனக்கு முன்னால் இருக்கையில் அமர்ந்திருந்த இளவரசர் வில்லியமை மகாராணி திட்டி எழுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் 90-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பக்கிங்காம் அரண்மனை பால்கனியில் இருந்து மகாராணியின் குடும்பம் நின்று வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
பால்கனியில் மகாராணி, இளவரசர் வில்லியம், இளவரசர் ஹரி, இளவரசி கேட் மிடில்டன் மற்றும் குட்டி இளவரசர் ஜோர்ஜ், இளவரசி சார்லோட் ஆகியவர்கள் இருந்துள்ளனர்.
அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பிறகு மகாராணி சிறிய உரையை ஆற்றியுள்ளார். அப்போது, இளவரசர் வில்லியமை தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்றுள்ளனர்.
இதனை கவனிக்காத இளவரசர் வில்லியம் இருக்கையில் அமர்ந்தவாறு இருந்துள்ளார். வில்லியமின் செயலால் சிறிது அதிருப்தியான மகாராணி ‘Stand up, William’ என அதட்டியவாறு உத்தரவிட்டுள்ளார்.
பாட்டியின் எச்சரிக்கை வார்த்தையால் கலக்கம் அடைந்த இளவரசர் வில்லியம் அவசர அவசரமாக எழுந்து நிற்கிறார்.
இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

No comments:

Post a Comment