Tuesday, August 4, 2015

காணாமற்போன சிறுமி இளைஞனுடன் சேர்ந்து வாழ்ந்தாராம்! தந்தை தனக்குத் தானே தீ மூட்டினார்!!

காணாமற்போன சிறுமி இளைஞர் ஒருவருடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதை அறிந்த சிறுமியின் தந்தை தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டார்.

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – தென்மராட்சி – கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது:
கொடிகாமத்தைச் சிறுமி காணமற் போனார் என அவரின் பெற்றோர்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனும் காணாமல் போயிருந்தார்.
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த இளைஞனும் சிறுமியும் குடும்பமாக வாழ்வதைக் கண்டறிந்து, அவர்களைக் கைது செய்தனர்.
தனது மகள் இவ்வாறு நடந்து கொண்டார் என்பதை அறிந்த சிறுமியின் தந்தை தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார்.
எனினும் குடும்பத்தவர்களால் காப்பாற்றப்பட்ட அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இளைஞரையும் சிறுமியையும் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை பொலிஸார் முற்படுத்தினர்.
இதன்போது, இளைஞனை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பதில் நீதிவான் செ.கணபதிப்பிளை, சிறுமியை கைதடி இரட்சணிய சேனை இல்லத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன், இளைஞனையும் சிறுமியையும் சட்ட வைத்திய பரிசோதனைக்குட்படுத்தி எதிர்வரும் 14 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பதில் நீதிவான் கட்டளையிட்டார்.

No comments:

Post a Comment